க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

க. பொ. த உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் 5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டள்ளார்.

பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கும் இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும்.

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைகளில் பழைய- புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35 318 பாடசாலை பரீட்சார்த்திகளும்- 45242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டத்தின் படி 12146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளே தோற்றவுள்ளனர்.

நாடு முழுவதும் 2164 பரீட்சை நிலையங் களில் பரீட்சைகள் நடைபெற வுள்ளன. விசேட தேவையுடையவர்க ளுக்கென ரத்மலானையிலும்- தங்கல்லயிலும் பரீட்சைகள் நடத்தப்படும்.

பரீட்சை கடமைகளில் 16264 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ் சிங்கள மொழிகளில் மொத்தம் 40 லட்சம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல்- ஒலிபெருக்கி பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மண்டபத்துள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூட மாணவர்களுக்கு பரீட்சார்த்திகளுக்கு இடையூறு அல்லது அவர்களது கவனம் சிதைந்து விடும் விதத்தில் ஒலி கேட்கும் விதத்தில் பாதணிகள் அணிவதும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் நாட்களில் பாடசாலை வளவுக்குள் பரீட்சையுடன் தொடர்புடையவர்களைத் தவிர வெளியார் எவரும் உள்ளே செல்லக் கூடாது. இம்முறை பொலிஸாரின் கூடுதல் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.(எம்.ரி.-977)

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்