கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில்" ஆஷாத் பார்க்"திறப்பு விழா

இஷாரத் 

கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில் அமையப் பெற்றுள்ள " ஆஷாத் பார்க்"திறப்பு விழா வைபவம் வெள்ளிகிழமை (09) மாலை 5.30க்கு  நடை பெற்றது.

சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக  அமைக்கப் பட்ட கிறீன் பீல்ட் வீட்டுதிட்டத்தின்  முகாமைத்துவக் குழுத்தலைவர்  ஏ.எம்.எம். கபூல் ஆசாத்தின்  வழி  காட்டலில்  நவீன வசதிகளை கொண்ட  சிறுவர் ,பெரியோர் என இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட  பொழுது போக்கு அம்சங்களை கொண்டதாக இப் பூங்கா அமையப் பெற்றுள்ளது. 

இத்திறப்பு விழா வைபவத்தில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ,முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக் ,இப்பூங்காவின் ஸ்தாபகர்  தேசமானிய நாசிருள் ஹக் ஏ.எம்.எம். கபூல் ஆசாத்
 ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர் .நோன்பு பெருநாளை கொண்டாடிய மக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்