சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞா பகார்த்த வைத்திய சாலையில் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் சத்திர சிகிச்சை


 கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில்  தன்னியக்க  ஸ்டெப்ளர்  மெசின் பயன் படுத்தப்பட்டு  இன்று (09.07.2013 )நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை  பூரண  வெற்றியளித்துள்ளதாக  மருதமுனை கிராமத்தை சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம்  தெரிவித்தார் .

இந்த சத்திர சிகிச்சை சற்று நேரத்துக்கு முன்னர் சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில் இடம் பெற்றது.  சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம் மேலும் தெரிவிக்கையில்  இவ்வாறான சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் நடை பெறுவது இதுவே முதல் தடவையாகும்  மேலத் தேய நாடுகளில் குறிப்பாக  சகல வசதிகளும் கொண்ட வைத்திய சாலைகளே  இவ்வாறான சத்திர  ச்கிச்சைகளை செய்கின்றன . எனினும்  பிரபலமான  எமது நாட்டு வைத்திய சாலைகளில்  தற்போது இவ்வாறான சத்திர  ச்கிச்சைகள்  செய்யப்படுகின்றன .

ஆனால்  வளப்பற்றாக்குறை யுடன் சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில்  எம்மால் செய்யப்பட்ட   இவ்வாறான சத்திர சிகிச்சை பெரும் பிரயத்தனமான நடவடிக்கையாகும் .  குறிப்பாக  மூல நோய்  உள்ளவர்களுக்கு அறுவை செய்யாமல்  தன்னியக்க  ஸ்டெப்ளர்  மெசின் பயன் படுத்தப்பட்டு  செய்வதனால்  வலியோ,அல்லது இதன் பின்னர் மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்க்கு வாய்ப்போ  இல்லை   என அவர் தெரிவித்தார் .


இச்சத்திர சிகிச்சைக்கு முழுமையாக மயக்கவோ,கூடுதலான நேரமோ  தேவைப்படாது  எனவும் தெரிவித்த  சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம்  இதன் நம்பக தன்மையை வெளிப்படுத்த  சத்திர சிகிச்சை செய்த இடத்துக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கினார்.வைத்திய சாலை பொறுப்பதிகாரி   டாக்டர் வை.டி .எம். அஸீஸ்  விசேடமாக  இச்சத்திர சிகிச்சையை பார்வையிட்டார் .

இதே நேரம்  மேலும் ஒரு வருக்கு  சிறு நீராக அறுவை  சிகிச்சையும் அங்கு இடம் பெற்றது .சிறு நீரகத்தில் இருந்து  மூன்று கற்கள் வெட்டி அகற்றப்பட்டன . 







இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்வதென்றால் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் ,வைத்திய சாலைகளையும்  கொழும்பு ,கண்டி போன்ற  இடங்களில் தான் பெற முடியும்  எனினும் எந்த வசதியும் இல்லாத சம்மாந்துறை வைத்திய சாலையில் இவ்வாறான  பாரிய அறிவை சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இப்பிரதேச அரசியல் வாதிகளும்  மக்களும்  இது போன்ற வைத்திய சாலைக்கு  உதவ முன் வர வேண்டும் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது