திருமணப் பந்தத்தில் இணைந்தார் மெத்தியூஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இன்று திருமணப் பந்தத்தில் இணைந்தார்.
மெத்தியூஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றது.
இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Comments
Post a Comment