ஜனாஸாவை உரிமை கோருங்கள்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் கிண்ணியா பிரதேசவாசி ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மான்சோலையை  சேர்ந்த 68 வயதையுடைய அப்துல் காதர் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகயீனம் முற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் நேற்று மாலை 5 மணியளவில் மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும் இந்த சடலம் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது