பிரான்ஸ் நாட்டு தூதுவர் கல்முனை வருகை!

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளிற்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் கிறிஸ்டின் றொபிச்சன் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் நேற்று மாநகர சபைக்கு வருகை தந்தார்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் இங்கு வாழும் சமூகங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவு போன்ற விடயங்கள் தொடர்பாக முதல்வரினால் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகரத்திற்கான மாநகர அபிவிருத்தி திட்ட வரைபு முதல்வரினால் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாநகர  சபை உறுப்பினர்கள்,  உட்பட  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்