சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி


கல்முனைப் பிரதேச சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினத்தையொட்டி கல்முனைக்குடி, மற்றும் மருதமுனை-நற்பிட்டிமுனை சமுர்த்தி வலையங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2012.10.12ம் திகதி நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதே செயலாளர் திரு:எம்.எம்.நௌபல், கௌரவ அதிதியாக சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர் திரு: ஏ.ஆர்.எம். சாலி, விசேட அதிதியாக சமுர்த்தி வலய முகாமையாளர் திருமதி: எஸ்.எஸ். பரீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.




இம் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனைக்குடி சமுர்தி வலயம் நற்பிட்டிமுனை-மருதமுனை சமுர்த்திவலயத்தை தோற்க்கடித்து சம்பியன் கிண்ணத்தைத் தட்டிச்சென்றது இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய 31 சிறுவர் கழகங்களுக்குமான விளையாட்டு உபகரணங்களையும் பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது