கலாசார விழாவும் முனை மலர் நூல் வெளியீடும்














கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டிற்கான 'கலாசார விழா' நிகழ்வும், 'முனை மலர்' நூல் வெளியீடும்  ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், கலாசார பேரவை உறுப்பினர்கள் பலரின் ஆக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  பீ.பத்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலாசார பேரவையின் தலைவரும், பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக கவிஞரும், நிர்வாக உத்தியோகத்தருமான எம்.பி.அபுல்ஹஸன், எழுத்தாளரும் தலைமை நிர்வாக கிராம உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ.லாகிர், மொழிபெயர்ப்பாளர் என்.நயீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.ஜெபர் உட்பட கலைதுறை சார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று