தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 19, 20 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆறு பட்டமளிப்பு விழாக்களும் கொழும்பு நகரத்திலேயே நடத்தப்பட்டன. இம்முறை பட்டமளிப்பு விழாவை பல்கலை ஒலுவில் வளாக பூங்காவில் வெகு சிறப்பாக நடத்துவதற்கு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ,உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்க அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேரும் வெளிவாரி மாணவர்கள் 270 பேரும் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது