சாய்ந்தமருதில் பெண் ஒருவர் தீப்பிடித்து உயிரிழப்பு


சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மின் ஒழுக்கு தீ விபத்து காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா (வயது36) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.

இன்று மதியம் தனது வீட்டுக் குளியலறையில் மின் இயந்திரத்தில் உடு துணிகளைத் துவைக்கும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கினால் அவர் தாக்கப்பட்டதுடன் இயந்திரம் சகிதம் அவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்