வாகரையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு



வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை ஆயுதங்களை நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
வாகரை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கதிரவெளியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆர்.பி.ஜி. குண்டு-09, மோட்டார் குண்டு- 31, 50 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள்- 201, துப்பாக்கி ரவைகள்- 183, கிளைமோர பெற்றரிகள்- 12, மோட்டார் பியூஸ் – 49 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி ஆயுதங்கள் யுத்த காலத்தில் புதைக்கப்பட் டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்