சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா


சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மத்ரஸாவின் அதிபர் அல்-ஹாபிஸ் எம்.எஸ்.எம்.ஸானாஸ் மத்ரஸாவின் ஆசிரியர்களான அல-ஹாபிஸ் அப்துல் ஹலீம்இ அல்-ஹாபிஸ் அப்துல் கரீம் ஆகியோருடன் முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்பட மத்ரஸா மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இம்மத்ரசாவில் சுமார் 120க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு 2012ம் ஆண்டில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 8 இளம் மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்