23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் 23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

கின்னஸ் சாதனைக்கான அரங்கில் தமிழ் உறவுகள் உட்பட ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

சுதாகரன் சிவஞானதுரையின் ( வயது 37 ) தலை மயிரில் ஒரு வகை நாடாவால் பலமாக சுருக்குப் போடப்பட்ட்து.

தரையில் இருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தரத்தில் தொங்கினார்.

இவரது நிறை. 57 கிலோ. கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தியானம், யோகா ஆகியவற்றை வாழ்வியல் ஒழுக்கமாக கடைப்பிடித்து வருகின்றமையால்லும், . இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்துகின்றமையால் முடி மிகவும் பலமானதாக உள்ளமையாலும் இச்சாதனையை நிறைவேற்ற முடிந்து உள்ளது என சாதனை வீரன் சுதாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். 

இவரது இச்சாதனை முயற்சி முன்பு இவ்வுலகில் எவராலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று