கல்முனை முதல்வரை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டும் விழா


கல்முனை முதல்வர் கலாநிதி
சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும்
மக்களும் பாராட்டி
கௌரவிக்கும் மாபெரும்
 விழா நேற்று இரவ சாய்ந்தமருது பீச்
 பார்க்கில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
 சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ் 
தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
 நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம 
அதிதியாக பங்கேற்றார். கௌரவ அதிதிகளாக
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்
 கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,
 திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
 எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட் மற்றும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட
 உறுப்பினர்கள், வர்தக சங்க பிரதிநிதிகள்,
கல்விமான்கள், உயரதிகாரிகளும் கலந்து
சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்