அரசியல் தலையீட்டைக் கண்டித்து டாக்டர்கள் ஆர்பாட்டம்



கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை நிருவாகத்தில் அரசியல் தலையீடு இடம்பெற்று வருவதைக் கண்டித்து வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது. இதில் அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களும் தாதியர்களும் ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இவ்வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒரு சிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாட்டையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்