கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு விழா













கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு  விழா இன்று ஞாயிறு காலை சிறப்பாக நடை பெற்று முடிந்தது.

கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான  வருடாந்த விழா  நான்காம் நாளான இன்று  காலை கூட்டு திருப்பலியுடன்  நிறைவடைந்தது.

குருத்துவத்தில் வெள்ளிவிழா காணும் அருட்தந்தை இமானுவல் தலைமையில்  இடம்பெற்ற ஆலய இவ்விழாவில்  நற்சிந்தனை  கூட்டுப் பிரார்த்தனை என்பன இடம் பெற்று கூட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டது.
கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்கு தந்தை ஜோன் அடிகளார் உட்பட கல்முனை கார்மேல் அன்னையர் மட அருட் சகோதரர்கள்,அருட் சகோதரிகள் உட்பட கல்முனை பிர தேசத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று இடம் பெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்