மார்ச் 8, 9ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு



சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த வர்களின் விண்ணப்பப்படிவங்கள் நேற்று (25) தபால் திணைக்களத்திடம் பெற்றுக்கொடுத்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
மார்ச் மாதம் 8 - 9 திகதிகளில் இடம் பெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பிற்கு மூன்று இலட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றி ஆறு பேர் விண்ணப்பித் துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ள மையால் 66 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர் தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 8 உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இது வரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தேர்தல் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்