மருதமுனையில் கஞ்சா செடி வளர்த்த சித்த வைத்தியர் கைது


மருதமுனை அக்பர் வீதியில் கஞ்சா செடியினை வளர்த்து வந்த சித்தவைத்தியர் கல்முனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறிப்பிடப்பட்ட சித்த வைத்தியரின் வீட்டினை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது 500 கிராம் கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பிட்ட வைத்தியரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்