உள்ளூராட்சி திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

உள்ளூராட்சி திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக பதினெட்டு  வாக்குகளும் எதிராக பதினொரு    வாக்குகளும் செலுத்தப்பட்டு  ஏழு மேலதிக வாக்குகளால்  நிறை வேற்றப்பாட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரா துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிச் சென்றார்.

வாக்கெடுப்பு இன்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி இன்றிரவு 10.40 மணிவரை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை கூட்டம் தொடங்கி இரவு 10.40 மணிவரை சபை அமர்வு இடம்பெற்றது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி