கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்





மட்டக்களப்பு கரடியனாறு இன்று காலை 11.30 அளவில் ஜும்மாஹ் தொழுகைக்கு சற்று முன்னர் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் களஞ்சியப் படுத்தி வைக்கபட்டிருந்த சீனா கட்டிட நிர்மான பணியாளர்களின் வெடிமருந்துகள் வெடித்ததில்  62 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போலிஸ் நிலையம், அதிரடி படை முகாம், கமநல சேவைகள் நிலையம் என்பனவும் முற்றாக சேதமடைந்துள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிழந்தவர்களில் இரண்டு சீன பிரஜைகளும் ஏராவூரை சேர்ந்த ஐயூப் கான் என்ற பொலிஸ் உத்தியோகர்தவரும் அடங்குவதாகவும் அறிய முடிகின்றது
பிந்திய செய்தி சற்று முன்னர் வரையும் 27 உடல்கள் மாத்திரம் சிதைந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படங்களை பார்க்க

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்