மட்டக்களப்பில் பொலிஸிடம் ஆயுதம் திருட்டு

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்புக் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு ரயில் நிலையப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்