அரசில் இணைவது பற்றி ஆராய மு. கா. அதியுயர் பீடம் இன்று கூடுகிறது

அரசாங்கத்தில் இணைவது பற்றி இறுதி முடிவெடுப்பதற்காக முஸ் லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடம் இன்று அவசர அவசர மாகக் கூடுகிறது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் மு. கா.வின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதென மு. காவின் வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பதைப் பற்றியே ஆராயவுள்ளோம். பெரும்பாலும் இணைவதில் சாதகமான நிலை ஏற்படலாம்” என அவர் கூறினார்.
கட்சியிலுள்ள எம். பிக்களும் முக் கிய பொறுப்புக்களில் உள்ளோரும் அரசில் இணைய வேண்டும் என்ப தில் ஆர்வமாகவுள்ளனர். ஆகவே இந்த விடயத்தில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் நூர்தீன் மசூர் எம். பி. தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்