கல்விக்கடல் ஜமால்தீன் அதிபர் காலமாகி விட்டார்

கல்முனை பிர தேசத்தின் கல்விக்கடல் நட்பிட்டிமுனையின் தங்க மூளை என செல்லமாக அழைக்கும் ஏ.எம்.ஜமால்தீன்  இன்று மாலை நட்பிட்டிமுனையில்  காலமானார். நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில் நீண்ட கால அதிபராக இருந்து தன சமுகத்திற்காக  அரும் பணியாற்றி கல்விப்பணிக்காக தன வாழ்நாளை அர்பணித்தவர்.

நற்பிட்டிமுனை கிராமத்தின் பூர்வீக வரலாற்றை தொகுத்து வெளீயீடு செய்ய இருந்த சந்தர்பத்தில் அவர் மறைந்து விட்டார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான  இவருக்கு இறக்கும் போது  63வயதாகும்
இவரது ஜனாசா இன்று வெள்ளிக்கிழமை நற்பிட்டிமுனை போது மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது . ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Comments