நாளை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா



மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா நாளை காலை 10.00 மணிக்கு இடம்பெறவிருப்பதாக கல்லூரி அதிபர் எஸ்.எல்.எம். ஜலாலுதீன்  கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார்.


மேலும், இப்பாடசாலையின் மீள் கட்டுமான பணிகளுக்கு முழுமையான நிதியுதவியை யுனிசொப் நிறுவனம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை இடம்பெறவுள்ள திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக யுனிசொபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிலிப்பே டுஆ முல்லே மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரி முழுமையான சேதத்திற்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்