ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தலின் பின்னரான வன்முறைகள்

அம்பாறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, ஏழாம்குறிச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீட்டின்மீது இன்றுஅதிகாலை 1மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேனொன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தலின் பின்னரான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்