நாடாளுமன்ற தெரிவு காரணமாக கிழக்கு மாகாண சபைக்கு பல புதுமுகங்கள்

கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.எஸ்.எம்.தெளபீக் மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் வெற்றிடத்திற்காக ஓட்டமாவடி புர்க்கான், கிண்ணியா லாபீர் மற்றும் புல்மோட்டை அன்வர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், முன்னாள்  மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்காக இதுவரை யாரும் தெரிவுசெய்யப்படவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்