கல்முனை சம்பத் வங்கி கிளை 365 நாள் சேவையை வடக்கு கிழக்கில் முதல் தடவையாக ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களை அறிவுறுத்தும் சந்திப்பு நேற்று வங்கி முகாமையாளர் நிதர்சன் டேவிட் தலமையில் நடை பெற்றது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் TV Derana உடன் இணைந்து "Mora Lenz Media Awards 23" எனும் அகில இலங்கை அறிவிப்பு மற்றும் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்தது. இலங்கையில் உள்ள 30ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் சார்பாக 2000ற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் முதல் கட்டத்தில் நுழைய கலந்து கொண்டனர். 2வது கட்டத்தில், 40 பங்கேற்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிக்கட்டத்திற்கு 10 இளங்கலை மாணவர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். University of Vocational Technology - Ratmalana பல்கலைக்கழகம் சார்பில் A.G.Mohamed Ajeeth இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி மிகவும் பெறுமதியான அகில இலங்கை- முதன்மை ஆங்கில அறிவிப்பாளர் சான்றிதழையும் பெற்றுக்கொடுத்தார்.
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் என் . எஸ் .எஸ் . அமீர் அலி நியமிக்கபட்டுள்ளார் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியதீன் அவருக்கான நியமன கடிதத்தை நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கையளித்துள்ளார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் சட்டத்தரணி வை .எல் .எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் முன்னால் அமைச்சர் அமீர் அலி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார் இவரின் தோல்விக்கு அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்க பட்டமை காரணமாக தெரிவிக்கபட்டது குறிபிடத்தக்கது
முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிய முடிகின்றது முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கும் முகமாகவே இவ்வலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது இதன் இரண்டாவது பிராந்திய அலுவலகம் புத்தளத்தில் திறக்கப்படும் என்று வேறு சில தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப
Comments
Post a Comment