Posts

"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி

Image
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான    கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி  இம்முறை அம்பாறையில்  இடம்பெறவுள்ளது, மலரும் கிழக்கு எனும்  தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி  நாளை   ஞாயிற்றுக் கிழமை  ( 10 ) ஆம் திகதி  அம்பாறையில்  ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது, இந்த  கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி  10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது, இதற்கு முன்னர்     திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது, கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளது   கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் விடுத்த அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித ப

"வித்தகர் விருது " பெற்ற சுப்பிரமணியம் அரசாரத்தினம் அவர்களைப் பாராட்டும் விழா

Image
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில்  தமிழ்  இலக்கியப் பனி புரிந்தமைக்காக  "வித்தகர் விருது " பெற்ற  சுப்பிரமணியம் அரசாரத்தினம் அவர்களைப்  பாராட்டும்  விழா  நாளை (09) கல்முனையில் நடை பெறவுள்ளது. ஓய்வு நிலை கோட்டைக்கல்வி அதிகாரி பொன் செல்வநாயகம் தலைமையில் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில்  நாளை காலை 9.30 மணிக்கு இப்பாராட்டு விழா நடை பெறவுள்ளது.

கல்முனை சோலைக்கிளியின் மண் கோழி ,நெடுப்பமாய் இழுத்த பந்தல்

Image
உலகறிந்த எழுத்தாளர் கல்முனையை சேர்ந்த சோலைக் கிளி என்றழைக்கப்படும் அதீக் எழுதிய மண் கோழி, நெடுப்பமாய் இழுத்த பந்தல் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்  கிழமை  கல்முனை அல்-மிஸ்பாஹ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடை பெற்றது. நெடுப்பமாய் இழுத்த பந்தல் நூலை உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜனும் மண் கோழி என்ற கவிதை நூலை எழுத்தாளர் ஹனிபா இஸ்மாயிலும் விமர்சன உரை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தனர். நூலின் முதல் பிரதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டு எஸ்.எஸ்.றகுமத்தல்லா மற்றும் ஓய்வு  பெற்ற ஆசிரியர் ஏ.எம்.ஹனீபா, உமாவரதராஜன்  ஆகியோருக்கு  வழங்கி வைத்தார். எழுத்தாளர்களான சத்தார் எம்.பிரதௌஸ்றி, ஸாட் சரீப் , எஸ்.நளீம் ஆகியோரால் தொடக்க உரை நிகழ்த்தப்பட்டு  அமைச்சர் ரவூப்ஹக்கீம் , வெளி நாட்டு அலுவல்கள்  அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் , தென்  கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா, வைத்தியர்களான ஆர்.முரளீஸ்வரன்,  புஸ்பலதா லோகநாதன், உட்பட்ட முக்கியஸ்தர்கள் பலாரார் நூல் பற்றிய சிறப்புரை நிகழ்த்தப்பட்டது நிகழ்வின் ஏற்புரையை நூ

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிராக மருதமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம் உலகையே உலுக்கி விட்டிருக்கும் நிகழ்வாகவே நோக்க முடிகிறது.  இதுவரையில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்ய்பபட்டிடருக்கின்றனர். இந்த வெறித்தனத்தைக் கண்டித்து இன்று(08) மருதமுனையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் நூர்  பள்ளி வாசலில் இன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பெருந் தொகையான முஸ்லிம்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மருதமுனை மசூர் மௌலானா வீதி சந்தி வரை  பதாதைகளை ஏந்த எதில்ப்பு கோசங்களுடன் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதியை மறித்து சற்று நேரம் வீதி போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பை வெளியிட்டனர் ரோஹிங்கிய மாநிலத்தில் இன்று இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவர எவராலும் முடியாது என்ற அவலமே காணக்கூடியதாகவிருக்கின்றது. உயிர்ப் பாதுகாப்புக்காக தப்பிச் செல்லும் ரோஹிங்கிய

மருதமுனை மண் மனாரியன்களின் நடைபவனி

Image
105 வருடங்களை தாண்டிய மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம் பெற்று வருகிறது சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் சிரமதானப் பணிகளும், சமூக சேவையாக இரத்த தானம் வழங்கும் நிகழ்கவுளும் இடம் பெற்று கடந்த செவ்வாய்க்கிழமை மனாரியன்களின் நூற்றாண்டு விழா நடை பவனியும் நடை பெற்றது. 1500க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கல்லுரி வளாகத்தில் ஒன்று சேர்ந்து கல்லூரியிலிருந்து சீருடை அணிந்த வண்ணம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பாண்டிருப்பு ஊடாக கல்முனை நகரை அடைந்து மீண்டும் கல்லூரியை சென்றடைந்தனர். மனாரியன் அணிநடை பிரிவு பேண்ட்வாத்திய குழு, மானாரியன் குதிரைப்படைப் பிரிவு என்பன ஊர்வலமாக மனாரியன் கொடிகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.