புதிய தேர்தல் சட்டமூலத்தில் சிறுபாண்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கான யோசனைகள்
டாக்டர் வை.எல்.யூசுப் புதிதாக நடைமுறைப் படுத்துவதற்கு முன் மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அல்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகிதாசார பிரதி நிதித்துவம் எனும் ஒரு பிரிவுமுறைக்கு ஓதுக்கப்பட்ட ஒரு தேர்தல்முறையாக சொல்லப்படுகின்றது. அதாவது மொத்த ஆசனங்கள் 255 அல்லது 254 ஆக உயர்வடையும். விருப்பு வாக்கு நீக்கப்படும் போது அதிகூடுதலாக விருப்புவாக்குப் பெற்றவர் என்பதற்கு பதிலாக, அதிகூடுதலான வாக்கைப்பெற்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றவரைத் தீர்மானிக்கும் முறை என்று கூறப்படுகிறது. இங்கே கவனிக்கவேண்டிய முக்கிய விடயமானது, மேலதிகமாக உள்வாங்கப்படுகின்ற 30 ஆசனங்களின் பெரும் பகுதி தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற முறைப்படி ஆகக்கூடுதலான ஆசனத்தைப் பெறுகின்ற பெரும்பாண்மைக் கட்சிக்கே செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அக்கட்சி தனியாக ஆட்சியமைக்கும் தகுதியைப் பெறுமென்றும் சிறுபாண்மைக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தி இழக்கச்செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காகவும் சிறுப