கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிகளிவாசல்கள் நிர்வாகத்தினால் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி பகிர்ந்தளிப்பு


கொரோனா வைரஸ் தொற்று அசாதாரண  நிலமையின் காரணமாக கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிகளிவாசல்கள் நிர்வாகத்தினால் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி பகிர்ந்தளிக்கு வைபவம் கல்முனை அனைத்து  பள்ளிகளிவாசல்கள்  சம்மேளனத்தின்  தலைவர்  டாக்டர்  எஸ்.எம்.ஏ. அஸிஸ் தலைமையில் இன்று  09 முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  முன்னிலையில்  நடை பெற்ற  நிகழ்வில் மேற்படி நிவாரண தொகையினை
கல்முனை பகுதியில் உள்ள பள்ளிவாசல்களினூடாக குறித்த பயனாளிகளின் வீடுகளிற்கு தலா 2000 ரூபா பணம் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டு ரொக்கப்பணம் கையளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கல்முனை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி உதவி பெறாத தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வறுமை குடும்பங்களை இனங்கண்டு இன்றய  தினமே இப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்