மருதமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை திறப்பு விழா


(பி.எம்.எம்.ஏ.காதர்)
இவ்வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி கல்முனை மாநகர சபைக்காக மயில் சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களுக்காக மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு)கிளை திறப்பு விழா நாளை சனிக்கிழமை(06-01-2018)மாலை 4.00மணிக்கு  வேட்பாளர் வை.கே.றகுமான் தலைமையில் நடைபெறவூள்ளது.
இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்இஅமைச்சருமான ரிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைப்பதுடன் மருதமுனை பிரதேசத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முஹம்மட்(2ஆம் வட்டாரம்)   வை.கே.றகுமான்;(3ஆம் வட்டாரம்)ஏ.எச்.ஏ.ழாஹிர்(4ஆம் வட்டாரம்)பஹூர்தீன் சிபான்(5ஆம் வட்டாரம்) ஆகியோரை ஆதரித்து அமைச்சர் விஷேட உரையாற்றவூள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது