மருதமுனை ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம்

(யூ.எம்.இஸ்ஹாக்)

மருதமுனையை சேர்ந்த  திருமதி பதுர்தீன் ஜிஹானா அலிஃப்  கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தில்  முகாமைத்துவப் பிரிவுக்கான பிரதிக் கல்விப்  பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் .

2008.09.11 இல் ஆசிரியர் முதல் நியமனம் பெற்ற இவர்  சம்மாந்துறை தாருஸ்ஸலாம்  மகா வித்தியாலயத்தில்  ஆசிரியராக கடமை புரிந்தார் . 2013, 2014 இலங்கை  கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற இவர்  சம்மாந்துறை  வலையக்  கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான  பிரதிக் கல்வித் பணிப்பாளராக 2014.06.11 இல்  நியமிக்கப் பட்டார் . சம்மாந்துறை வலயக்  கல்வி அலுவலகத்தில்  இரண்டு ஆண்டுகள் கடமையாற்றிய இவர்  கடந்த 14.03.2016  தொடக்கம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில்  இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு  இடமாற்றப் பட்டு  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான  பிரதிக் கல்விப்  பணிப்பாளராக  வலயக் கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்,அப்துல்  ஜலீல் நியமித்துள்ளார் .

மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல்  உயர்தரம் வரை கல்வி கற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி