மூதூரில் வாகன விபத்து வாலிபர் ஒருவர் மரணம்

இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது வேகமாக சென்ற  பஸ் ஒன்று மோதியதில் ஒரு இளைஞன் மரணமடைதுள்ளதாக  மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர் .

கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸே  இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது . விபத்தை அடுத்து  அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது  உடன் ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் .

மரணித்த இளைஞனின் சடலம் மூதூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது . சாரதி  கைது செய்யப் பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பாக மூதூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . காயமடைந்த மற்ற இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் 










Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி