தாய்க்குலத்தை கௌரவித்த கல்முனை திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவு

(அப்துல் அஸீஸ்)


சர்வதேச மகளிர் தின வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட துறைசார்  மகளீர் கெளரவிக்கும் நிகழ்வு சமீபத்தில்   கல்முனை பிரதேச செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மகளீர்களில் சிறந்த முயற்சியாள பெண்,  சிறந்த சமூக சேவையாற்றும் பெண், ஆரோக்கியமான வயோதிபப்  பெண்,  முன்மாதிரியான தாய்,  வாழ்வில் முன்னேற்றகரமான பெண் ஆகிய துறைசார்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.
திவிநெகும முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீறா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகமட் ஹனி,  திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்,  திவிநெகும திட்ட  முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா,  திவிநெகும வங்கி-வலய  முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.முஸ்பிறா, சிறுவர் மேன்பாட்டு  உத்தியோகத்தர் ஒ.கே.சரிபா உட்பட திவிநெகும அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்