இலங்கைக்கு அருகே தாழமுக்கம் . . . .
அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. இலங்கைக்கு தென் கிழக்கே காற்றமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை பெய்யக் கூடும்.
தற்போதைய காற்ற முக்க நிலை வலுவடையும் நிலை ஏற் பட்டால் நாடு முழுவதும் கடும் மழை, வெள்ளம், மண் சரிவு அபாயங்கள் ஏற்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
Comments
Post a Comment