சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியாளர்களுக்கான செய்தியிடல்  தொடர்பான ஒரு நாள் செயலமர்வு  பத்தரமுல்ல  பெலவத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு  பணியக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (29)  நடைபெற்றது. 
சுயாதீன தொலைக்காட்சி செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் லால் ஹேமந்த மாவலகே  தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தவிசாளர்  ஹேமசிறி பெர்னாண்டோ  கலந்து கொண்டு உரையாற்றினார் 
பிராந்திய செய்தியாளர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் ஆராயப் பட்டதுடன் சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப் பட்டது.
நாடு பூராகவும் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்