கல்முனையில் ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயம் திறந்து வைப்பு

யு.எம்.இஸ்ஹாக் 

அம்பாறை கல்முனைக்குடி ஐக்கிய தேசியக் கட்சி மத்திய  குழு தலைமைக் காரியாலயம்  சற்று முன்னர் கல்முனை கடற்கரைப் பள்ளி  வீதியில் திறந்து வைக்கப்  பட்டது. 

ஐக்கிய தேசியக் கட்சி கல்முனைக்குடி அமைப்பாளர்  எஸ்.எல்.எஸ்.முஹீஸ் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே , கிழக்கு மாகாண  சபை உறுப்பினரும்  ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான தயா கமகே  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மக்கள் சந்திப்பும் இடம் பெற்றது . இதில் பெருந்தொகையான பெண்கள் கலந்து கொண்டனர் .





Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்