கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி கையளிக்கும் நிகழ்வு

 வறுமை ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு  கிழக்கு மாகாண  சபை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரனின்  நிதி  ஒதுக்கீட்டில்  சுய தொழில்  முயற்சியாளர்களுக்கான  நிதி கையளிக்கும் நிகழ்வு இன்று  உறுப்பினரின் மணல்சேனை அலுவலகத்தில் இடம் பெற்றது .

மாகாண  சபை  உறுப்பினரின் செயலாளர் வீ.அழகு ரத்தினம் தலைமையில் இடம் பெற்ற  வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண  சபை மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.நடராஜா  கலந்து கொண்டார் . நிகழ்வில்  நற்பிட்டிமுனை அம்பலத்தடி  ஆலய   நிருவாக பரிபாலகர் கனகரட்னம் ,ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் எஸ்.சுப்பிரமணியம்  ஆகியோரும் மற்றும்  கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

பதுளை மாவட்டத்தில் மண் சரிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப் பட்டதுடன் அவர்களுக்கான  உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அங்கு தெரிவித்தார் .

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  அரசின் செல்லப் பிள்ளையாக இருக்கின்ற வர்கள்  எம்மால் செய்யப் படுகின்ற திட்டங்களுக்கு தடையாக இருக்கின்றனர் . எமக்கு அபிவிருத்தி முக்கியமானதல்ல . தன்மானத்துடன் தமிழர்கள்  வாழ்வதையே நாம் விரும்புகின்றோம் . நாம் கிழக்கு மாகான சபையில் எதிர் கட்சியில் இருப்பதால்   ஆளும் தரப்பினர் எமக்கான பங்கீடை முறையாக தர மறுக்கின்றனர் . இருப்பினும் ஒரு சிலர் எமக்கு உதவுகின்றனர் என்றார்.




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது