ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் , உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் நாளை 30ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியாபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
ஊவா மாகாண சபை தேர்தலில் 96,619 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய சசேந்திர ராஜபக்ஷ இம்முறையும் ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக் கொள்வார்.

ஊவா மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து இன்று 29ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியன் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபை தேரிதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில்  19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்