நாளை முதல் வகுப்புக்கள் நடத்த தடை!

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு- தனியார் வகுப்புக்களை நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நேரமும் இருக்க வேண்டும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் க. பொ. த. சாதாரண- உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினத்திலிருந்து 05 தினங்களுக்கு முன் இருந்து பரீட்சைகள் முடிவும் வரையிலான முழுக் காலத்தில் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு துணை வகுப்புக்களை அமைத்தல் விரிவுரை கருத்தரங்கு செயலமர்வு- மாதிரி வினாபத்திரம் அச்சிட்டு விநியோகித்தல் போன்றவை வர்தமானி மூலம் தடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காலத்துக்குப் பொருத்தமானதென சிறுவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்