சாய்ந்தமருது அபிவிருத்தி பணிகள் வைபவம் மறுநாள் ஒத்திவைப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிக சாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் நாளை (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் நாளை (22.05.2013) நடைபெற உள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதனால் இந்நிகழ்வானது ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 23.05.2013 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி