மட்டக்களப்பு வாகன விபத்தில் இருவர் பலி


ஏறாவூர் மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
 
மோட்டார் சைக்கிள் வீதியில் மோதுண்டு தடக்கி விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் பட்டதில் பலியாகியுள்ளனர்.
 
ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி மற்றும் பிச்சைக்குட்டி முஹம்மது றியாழ் ஆகிய இருவரே கொல்லப்பட்டுள்ளனர். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
இருவரும் ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
 
மரணித்தவர்களில் ஒருவரான அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி