தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்





23 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு
 நாளையும்(29) நாளை மறுதினமும்(30) இடம்பெறவுள்ளது.

17 மாநகர சபை, 1 நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகள் உட்பட்ட 23
 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பே இவ்வாறு இடம்பெறவுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர்
 அட்டைகள் கடந்த 9ம் திகதி முதல் 21ம் திகதி வரை விநியோகிப்பட்டன.

இதன்படி தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அரச ஊழியர்கள்
 நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்கலாம்.

குறித்த 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் வாக்கெடுப்பு
 ஒக்டோபர் 8 ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Viewer Comments

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்