தேசிய ரீதியில்
மாகாணங்களுக்கிடையில் நடைபெற்ற மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில்
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக வீர்ர்களை பிரதிநிதித்துவப்படுத்திய
கிழக்கு மாகாண அணி இரண்டாவது இடத்தை பெற்று கல்முனை நகருக்கு வந்த போது
நகரில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.மாகாணங்களுக்கிடையிலான கிறிக்கட்
சுற்றுப் போட்டி கொழும்பு ரொறிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போது
இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட தென் மாகாண அணி 15 ஓவர்களில் 8
விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி (சனிமௌன்ட்) 15 ஓவர்களில் சகல
விக்கட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில்
இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.முதலாவது போட்டியில் கிழக்கு மாகாண அணி
ஊவா மகாண அணியுடன் போட்டியில் ஈடுபட்டு 15 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை
இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டினாலும் , மத்திய மாகாண அணியுடன்
போட்டியில் ஈடுபட்டு 4 விக்கட்டுக்களினாலும் வெற்றியீட்டியதனாலேயே இறுதிப்
போட்டியில் தென் மாகாண அணியுடன் போட்டியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தைப்
பெற்றுக் கொண்டது.தேசிய ரீதியல் இரண்டாவது இடத்தைப் பெற்ற கிழக்கு மாகாண
அணி வீர்ர்களை (சனிமௌன்ட்) கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்கள் , அரசியல்
பிரமுகர்கள் , வர்த்தகர்கள் மற்றும் விளையாட்டுதுறை சார்ந்த
உத்தியோஸ்தர்கள் மாலையிட்டு பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகவிவகார பிரிவின் கல்முனை கிளை ஏற்பாடு செய்த "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என்ற கருப்பொருளில் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வும் இன்று (28.10.2017)கல்முனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசலில் இடம் பெற்றது . இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளை பொறுப்பாளர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நட்டு வைத்ததோடு பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் , பொது நிறுவனங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைத்தார் கல்முனை அல் -பஹ்ரியா மகாவித்தியாலய அதிபர் ரசாக் ,கல்முனை அல் -மிஸ்பாஹ் மகாவித்தியாலய அதிபர் அமீன் உட்பட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிக...
Comments
Post a Comment