நவீன MP3 கைத்தொலைபேசிகளால் கேட்கும் திறன் குறைவு

நவீன MP3 கைத்தொலைபேசிகளால் கேட்கும் திறன் குறைவு அடைகின்ற பேரபாயம் காணப்படுகின்றது என இலங்கையின் தொழிநுட்ப அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்து உள்ளது.

இக்கைத்தொலைபேசிகளை தொடர்ந்து உபயோகிக்கின்றமையால் கேட்கும் திறன் குறைவடைந்து செல்கின்றது என அமைச்சைச் சேர்ந்த துறை சார் நிபுணர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

இவ்வாறான மின்னியல் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றமை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்றும் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

குறிப்பாக மலிவு விலையில் உள்ள இவ்வாறான உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றமைக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என்பது குறித்து பொதுமக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இலங்கையில் 14 மில்லியன் மக்கள் கைத்தொலைபேசிகளை உபயோகிக்கின்றனர்.

இவ்வாறான மின்னியல் உபகரணங்களை உபயோகிக்கும் போது ஒலியின் அளவை 50 சதவீதத்தை விட குறைத்து கேட்கும்படியும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்