கல்முனைஇலங்கை வங்கி முன்பாகபோராட்டம

அரச வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அரசு அமுல்படுத்த வேண்டும் என்கிற் கோரிக்கையுடன் இன்று நாடு பூராவும் தேசிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்போராட்டங்கள் இடம்பெற்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இப்போராட்டங்கள் இன்று முடுக்கி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச வங்கி ஊழியர்களின் யாழ்.மாவட்ட கிளை இப்போராட்டங்களை ஒழுங்கு செய்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இப்போராட்டங்கள் நடந்தன.

அம்பாறையில் கல்முனைப் பிரதேசத்தில் இலங்கை வங்கி முன்பாகவும்  போராட்டம இடம் பெற்றது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்