சட்டவிரோத ஆயுதகளை ஒப்படைக்கும் காலம் நீடிப்பு

மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில்  சட்டவிரோத  ஆயுதங்களை ஒப்படைக்கும் காலஎல்லை  இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் ஊடாக ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸார் அறிவித்திருந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனால் இதற்கான காலக்கெடு இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் மீண்டும் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்