கல்முனை முஸ்லிம் வாலிபர் இருவருக்கு மரண தண்டனை



கல்முனை முஸ்லிம்  வாலிபர் இருவருக்கு கல்முனை மேல் நீதி மன்றத்தால்  இன்று  மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி  வீ.சந்திரமணி  இந்த மரண தண்டனையை  வழங்கினார்.  கல்முனை மேல் நீதி மன்றம் ஆரம்பிக்கப்பட்டு  இரு வருடத்தில்  ஆறாவது மரண தண்டனை இதுவாகும்.
கல்முனை குடியை சேர்ந்த முகம்மது யூசுப் முகம்மது பரீத்  என்பவரை  2007.06.06 அன்று கத்தியால் குதி கொலை செய்த குற்றத்திற்காக இரண்டாம், மூன்றாம் எதிரிகளான முகம்மது ரபீக் பஸ்மீர், அப்துல் சரூக் முகம்மது ஹம்சா ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட முதலாம் எதிரியான  முத்தலிப் அக்கபர் ஹசன் என்பவர் விடுதலை செயப்பட்டார்.

Comments