அம்பாறை திருக்கோயிலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி

அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி


அம்பாறை திருக்கோவில் விநாயகபுர முகத்துவாரப் பிரதேசத்தில் விஷம் அருந்தி மயக்கமடைந்த நிலையிலிருந்த காதல் ஜோடியை திருக்கோவில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த காதல் ஜோடி நேற்று மாலை விஷம் அருதியதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.ரணதுங்க தெரிவித்தார்.

விநாயகபுரம் முகத்துவார தென்னம் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி மயக்கமடைந்த நிலையில் இருந்த இந்த ஜோடிகள் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த ஜோடிகள் அக்கரைப்பற்று சாகாம வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்