கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையத்தளங்களுக்கு தடை

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க   நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்  இது பற்றி குறித்த  கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் இரு மாதங்களுக்கு முன்னர்  உத்தரவிட்டது   இது தொடர்பில்கையடக்க தொலைபேசி நிறுவனங்களான டயலொக், மொபிடல், ஹட்ச், எடிசலாட், எயாடெல் ஆகியனஆபாச இணையதள பாவனையை கையடக்கத் தொலைபேசியில் தடை செய்வதற்கு ஏற்கனவே இணக்கம்  தெரிவித்துள்ளன கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனை அதிகரித்து வருவதே இத்தடைக்கு பிரதான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர் இந்த தடை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது
ஆனாலும் இந்த தடை ஆபாச தளங்களை கையடக்க தொலைபேசியில் முழுமையாக தடுக்குமா என்பதை தடை நடைமுறைக்கு வந்த பின்னர் தான் கூறமுடியும் என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி